:
Breaking News

சர்ச்சையில் சிக்கிய நடிகை குஷ்பு

top-news

தமிழகத்தில் உள்ள பெண்களுக்கு "1,000 ரூபாய் பிச்சை போட்டால்" திமுகவுக்கு வாக்களிப்பார்களா என நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு தெரிவித்த கருத்து சர்ச்சையாகியுள்ளது.

செய்தியாளர்களை சந்தித்த நடிகை குஷ்பு அவர்கள், போதைப் பொருளுக்கு எதிராக திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என விமர்சித்தார். அது தொடர்பாக ஆர்ப்பாட்டம் செய்யவில்லை என்றும் தாய்மார்களின் பிரச்சனைகளை தீர்த்து வைக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இருப்பினும் அவர் மகனின் உரிமைத் தொகையை "பிச்சை" எனக் குறிப்பிட்டு பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பல்வேறு தரப்பிலும் கண்டனம் தற்போது எழுந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *